, பாடுவது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கும்.
பாடுவது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கும். 'எண்டோர்பின்கள்' என்ற ஹார்மோன் சுரக்கவும் உதவுகிறது. ஒரு பாடலை ஏற்ற இறக்கத்துடன் பாடும் போது, நுரையீரல் சுருங்கி விரியும் செயல்பாடு அதிகரிக்கிறது. இதனால் ஆக்சிஜன் சுழற்சி அதிகரித்து பல்வேறு உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராக பாய்வதால் உடல் புத்துணர்வு பெறுகிறது. நுரையீரல் நன்கு செயல்படும் நிலையில் அதனுடன் இதயமும் ஆரோக்கியமாக செயல்பட தொடங்குகிறது. ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பாடுபவர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்த போது, பாடலை பாடி முடித்ததும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஆன்டிபாடியாக செயல்படும்.
ஒரு புரதமான இம்யூனோகுளோபுலின்-'ஏ' அதிகரித்ததை கண்டறிந்தனர். இதே போல மற்றொரு ஆய்வில், பாடுவது மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி, பயம் மற்றும் பதற்றம் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டது. மனித உடலில் வேகஸ் நரம்பு என்பது மிக நீளமான மண்டை நரம்பு ஆகும். இது மூளை, குடல், நுரையீரல், இதயத்தை இணைக்கிறது. ஒரு பாடலை பாடும் போது, ஆழ்ந்த சுவாசம் உள் இழுக்கப்படுவதால் வேகஸ் நரம்பு நன்கு தூண்டப்பட்டு மூளை குளிர்ச்சி பெறுகிறது. ஆய்வுகள் இது போல் ஏராளமான நன்மைகளை பெற முடியும் என்கின்றன,
0
Leave a Reply